முகப்பு
தமிழ்நாடு

டிச. 10ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்! - இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு பற்றி..

Updated On : 23 நவம்பர், 2025 at 6:55 AM
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

சென்னையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் டிச. 10 காலை 10 மணிக்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சில மாதங்களில் இன்னும் சட்டபேரவைத் தேர்தல் தொடங்கவுள்ளதால் அதிமுகவின் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 10.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

AIADMK Executive Committee and General Committee meeting on Dec. 10

முழு கட்டுரையைப் படிக்க →