நவ. 29ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
திமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு...
வருகிற நவம்பர் 29 ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நவ. 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.
திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தவெகவில் இணைந்தது ஏன்? - செங்கோட்டையன் பேட்டி