மணலியில் உள்ள சிபிசிஎல் தொழிற்சாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேர் கைது.  
தமிழ்நாடு

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ குப்பன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ குப்பன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மணலியில் அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் எண்ணை சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புதிதாக ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் பராமரிப்புப் பணிகளும் பகுதி பகுதியாக ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது.

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

இங்கு வட மாநில தொழிலாளர்கள் 3,000 பேருக்கு மேல் தின கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். தினக்கூலி பணியில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டுமென இப்பகுதி மக்கள் அடிக்கடி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதுண்டு.

தற்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் தலைமையில் தொழிற்சாலை முன்பு உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போலீஸார் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் உள்பட 50 பேரை கைது செய்து மணலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

50 people, including former MLA Kuppan, were arrested for protesting at the Manali CPCL plant demanding jobs for locals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பேருந்து வசதி இல்லாததால் மக்கள் அவதி

சேவைக் குறைபாடு: ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

SCROLL FOR NEXT