வந்தே பாரத்  (கோப்புப்படம்)
தமிழ்நாடு

கோவில்பட்டியில் வந்தே பாரத் நிற்கும் நேரம் அறிவிப்பு!

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நிற்கும் நேரம் அறிவிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை எழும்பூர் - நெல்லை இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நிற்கும் நேரத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அண்மையில் அனுமதி அளித்தது.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் கடந்த 2024 செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக 16 பெட்டிகளாக இருந்த ‘வந்தே பாரத்’ ரயில் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ‘வந்தே பாரத்’ ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இதுவரை நிற்காமல் சென்று வந்தது. அங்கு நின்று செல்ல அனுமதிக்குமாறு அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்துவந்தனர். அதற்கு, ரயில்வே வாரியம் அனுமதி தந்தது.

இந்த நிலையில், சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை அடிப்படையில் நாளை (அக்.9) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை - சென்னை வந்தே பாரத் (20666), கோவில்பட்டிக்கு காலை 6.38 மணிக்கு வந்து, 6.40 மணிக்கு புறப்படும் என்றும் சென்னை - நெல்லை வந்தே பாரத் (20665), கோவில்பட்டிக்கு இரவு 9,23 மணிக்கு வந்து. 9,25 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், 2 நிமிடம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Southern Railway has announced the timings of the 'Vande Bharat' train operating between Chennai Egmore and Nellai stopping at Kovilpatti.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளியூரில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமியின் குரு பூஜை விழா தொடக்கம்

கயத்தாறு அருகே பைக் திருட்டு: 3 போ் கைது

கோவில்பட்டி அருகே தொழிலாளியைத் தாக்கி கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தோ்வு: நாகா்கோவில் பள்ளி மாணவியருக்கு பாராட்டு

வீரபாண்டியன்பட்டணத்தில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழை நீா்

SCROLL FOR NEXT