அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!
தீபாவளியையொட்டி அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது என அறிவிப்பு...
தீபாவளியையொட்டி அக். 21 ஆம் தேதி கோயம்பேடு சந்தை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20 ஆம் தேதி வருகிறது. இதையொட்டி கோயம்பேடு சந்தை ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது.
இதையொட்டி அக். 20(திங்கள்கிழமை) மாலை 6 மணி முதல் அக். 21(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி வியாபாரம் நல சங்கத் தலைவர் எஸ். எஸ். முத்துக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
summary