தமிழ்நாடு

பேரவைத் தலைவரின் எதேச்சாதிகாரம்! தீபாவளி வாழ்த்து கோரிக்கையும் அவைக்குறிப்பில் நீக்கம்!

தீபாவளிக்கு வாழ்த்துகூற விடுத்த கோரிக்கையும் அவைக்குறிப்பில் நீக்கப்பட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

இணையதளச் செய்திப் பிரிவு

தீபாவளித் திருநாளுக்கு வாழ்த்துகூற விடுத்த கோரிக்கையும் அவைக்குறிப்பில் நீக்கப்பட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களுடன் வானதி சீனிவாசன் பேசுகையில், ``தீபாவளித் திருநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்குமாறு முதல்வரிடம் கேட்டேன். ஆனால், அதனை அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கி விட்டார்.

தீபாவளித் திருநாளுக்கு வாழ்த்துதான் சொல்லவில்லை. வாழ்த்துகள் சொல்லுங்கள் என்று சட்டப்பேரவை உறுப்பினர் கேட்டதைக்கூட, அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் அளவுக்குத்தான் திமுக அரசின் நிர்வாகம் இருக்கிறது; பேரவைத் தலைவரின் எதேச்சாதிகாரம் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: கரூர் பலி! தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்!

BJP MLA Vanathi Srinivasan slams DMK Govt for Diwali wishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT