தமிழ்நாடு

பேரவைத் தலைவரின் எதேச்சாதிகாரம்! தீபாவளி வாழ்த்து கோரிக்கையும் அவைக்குறிப்பில் நீக்கம்!

தீபாவளிக்கு வாழ்த்துகூற விடுத்த கோரிக்கையும் அவைக்குறிப்பில் நீக்கப்பட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

இணையதளச் செய்திப் பிரிவு

தீபாவளித் திருநாளுக்கு வாழ்த்துகூற விடுத்த கோரிக்கையும் அவைக்குறிப்பில் நீக்கப்பட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களுடன் வானதி சீனிவாசன் பேசுகையில், ``தீபாவளித் திருநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்குமாறு முதல்வரிடம் கேட்டேன். ஆனால், அதனை அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கி விட்டார்.

தீபாவளித் திருநாளுக்கு வாழ்த்துதான் சொல்லவில்லை. வாழ்த்துகள் சொல்லுங்கள் என்று சட்டப்பேரவை உறுப்பினர் கேட்டதைக்கூட, அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் அளவுக்குத்தான் திமுக அரசின் நிர்வாகம் இருக்கிறது; பேரவைத் தலைவரின் எதேச்சாதிகாரம் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: கரூர் பலி! தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்!

BJP MLA Vanathi Srinivasan slams DMK Govt for Diwali wishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT