தீபாவளி திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் தீபாவளி திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி திருநாளை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச்சாறு, தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.