கோப்புப் படம் 
தமிழ்நாடு

பருவமழை: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை மற்றும் தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் சில அறிவுறுத்தல்கள்...

இணையதளச் செய்திப் பிரிவு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர் மழை பெய்து வரும் நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பள்ளி வளாகத்தில் கட்டடங்கள், கழிப்பறைகள், சுவர்களை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

மாதந்தோறும் பராமரிப்பு, ஆய்வு செய்து செடி, கொடிகள் வளர்வதைத் தடுக்க வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்களிடையே வளாகத்தை பராமரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவு நீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கனமழை: 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

Monsoon: School Education Department issues instructions to teachers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு!

வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு! ஏமாற்றப்பட்டவர் சொல்வது என்ன?

காஞ்சிபுரத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 குறைவு!

திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT