முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம்...

Updated On : 24 அக்டோபர் 2025, 8:21 am IST
மழை - EPS
பகிர்:

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரம் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, இந்த வாரத் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை வெய்யில் அடித்த நிலையில், நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வருகின்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் இன்று காலை 10 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Rain in Chennai and 7 districts for the next 2 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.