முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது.

Updated On : 1 செப்டம்பர், 2025 at 12:47 PM
சென்னை விமான நிலையம்.
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது.

சென்னை சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் கவனிப்பாரற்று உலோகப் பெட்டி திங்கள்கிழமை கிடந்தது.

உடனே தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு கண்டறிதல் படை மற்றும் மோப்ப நாய்களுடன் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்தனர்.

Advertisement

தொடர்ந்து சுங்க அலுவலகம் அருகே கவனிப்பாரற்று கிடந்த சிறிய உலோகப் பெட்டியை அவர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் அந்தப் பெட்டி மேலும் சோதனைக்காக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தமிழ்நாட்டில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடலாம்: திருமாவளவன்

summary

A metal box that was lying unattended at the arrival terminal in the Chennai international airport created a flutter on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.