சென்னை விமான நிலையத்தில் ரஜினிக்கு சால்வை அணிவித்து வரவேற்ற ரசிகர்கள்!
ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார்.
கேரளத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடிந்துகொண்டு திங்கள்கிழமை மீண்டும் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் நடிகர் ரஜினியுடன் செஃல்பி எடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
Advertisement
Advertisement
அப்போது ரசிகர் ஒருவர் அவரது மகளின் திருமணத்திற்காக ரஜினியிடம் அழைப்பிதழ் வழங்கினார். தொடர்ந்து, ரசிகரின் மகள் ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றார்.
மேலும் காரில் ஏறும்பொழுதும் ரசிகர்கள் சூழ்ந்து ரஜினியுடன் செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Actor Rajinikanth returned to Chennai after finishing the shooting of Jailer 2.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.