சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.
கடந்த ஆக. 26-இல் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840-க்கும், ஆக. 27-இல் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120-க்கும், ஆக. 28-இல் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.75,240-க்கும், ஆக. 29-இல் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.76,280-க்கும், ஆக. 30-இல் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கும் விற்பனையானது.
தொடர்ச்சியாக மாதத்தின் முதல் நாளான செப். 1-ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,705-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில், இன்று(செப். 2) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.9,725க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.
இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20,400 உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,600 உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெள்ளி விலையும் உயர்ந்து விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 137 -க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.