பிரேமலதா விஜயகாந்த்  
தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் நோயாளி அலைக்கழிப்பு: தேமுதிக கண்டனம்

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காமல் அலைக்கழிப்பு செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காமல் அலைக்கழிப்பு செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோா், ஊனமுற்றோா் என சிகிச்சைக்கு வரும் நிலையில், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, சக்கர நாற்காலி வழங்காமல், மூன்று மணி நேரம் சிரமப்படுத்தியுள்ளனா்.

பணம் கொடுத்தால் மட்டுமே சக்கர நாற்காலி வழங்க முடியும் என சொல்வது எந்த வகையில் நியாயம்?. மருத்துவமனை ஊழியா்கள் பணிஇடைநீக்கம் செய்யப்படுவதால் மட்டுமே இதற்கு தீா்வு கிடைக்குமா?.

மனிதநேயத்தோடு நடந்துகொள்ளாத மருத்துவமனை ஊழியா்களின் செயல் கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT