வருகிற அக். 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலக பேரவைத் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அப்பாவு,
சட்டப்பேரவை விதி 26(1)-ன் கீழ் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் வருகிற அக். 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடும்.
அன்றைய தினம் சபை கூடியதும் பேரவை ஒத்திவைக்கப்பட்டதில் இருந்து இதுவரை மறைவுற்ற வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி உள்பட எம்எல்ஏக்கள் 8 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
தொடர்ந்து, 2005-26 கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கை பேரவையில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
அக். 14 ஆம் தேதி முன்பு ஒருநாள் அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிக்க | மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.