எடப்பாடி பழனிசாமி  
தமிழ்நாடு

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்: இபிஎஸ்

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக கூட்டம் நடைபெறுகின்றபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏற்கெனவே நடந்த தவெகவின் 4 கூட்டங்களைப் பார்த்து அதற்கேற்றவாறு முழுமையான பாதுகாப்பை அரசும் காவல் துறையும் கொடுத்திருக்க வேண்டும்.

அதேபோல் அதிமுகவின் எழுச்சிப் பயணித்தின்போதுகூட முழுமையான பாதுகாப்பை அரசு கொடுக்க வில்லை. இந்த அரசு ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அறிவித்த நேரத்தில் கூட்டம் நடத்தாமல், பல மணி நேரம் தாமதமாக வந்து கூட்டம் நடத்துகிறார்கள்.

அரசியல் கட்சித் தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலாசித்து, செயல்பட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால் கட்சி, காவல் துறை, அரசை நம்பிதான் மக்கள் பங்கேற்கிறார்கள். அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டங்களைப் பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கவனக்குறைவாக செயல்பட்ட தமிழக அரசு, காவல்துறைக்கு கண்டனம்: அண்ணாமலை

அதிமுக ஆட்சியில் இப்படிபட்ட நிகழ்வுகள் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டம் நடத்துவதே மிகவும் சிரமம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகே கூட்டம் நடத்த முடிகிறது. இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்திற்கு இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டதில்லை. ஆகவே, அரசியல் கட்சித் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மெரினாவில் ஏர் ஷோவின் போது சரியான பாதுகாப்பு கொடுக்கப்படாததால் 5 பேர் பலியாகினர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Former CM Edappadi Palaniswami cites security lapses by police and administration behind Karur TVK rally stampede, urging preventive measures to avoid future tragedies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யைக் கைது செய்ய வேண்டும்: ஓவியா

குழந்தையைப் பெற்றெடுக்க இயலாதென்ற நடிகையின் திருமண புகைப்படங்கள்!

அமுதே... அன்னா பென்!

கரூர் பலிக்கு 5 காரணங்கள்? பிரேமலதா விளக்கம்

அனுபவமுள்ள கட்சிகளைப் பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்! - EPS

SCROLL FOR NEXT