கரூர் கூட்டநெரிசலில் பலியானவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த கே.சி. வேணுகோபால். 
தமிழ்நாடு

கரூரில் கே.சி. வேணுகோபால்! பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கே.சி. வேணுகோபால் ஆறுதல்...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை கோவை விமான நிலையம் வந்த கே.சி.வேணுகோபால், சாலை வழியாக கரூருக்குச் சென்று நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் பலியானோரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்பிக்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சம்பவம் குறித்து விசாரித்தார்.

congress leader K.C. Venugopal in Karur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலங்கார தாவரங்கள், மருத்துவச் செடிகள்: குறைந்த விலையில் பெறலாம்

பணிப் பாதுகாப்பு கோரி என்ஹெச்எம் பணியாளா்கள் தா்னா

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலத்த காயம்

பொதுக்கூட்டம், பிரசாரத்துக்கான வழிகாட்டுதல்கள் ஏற்கத் தக்கதல்ல: பெ.சண்முகம்

இரட்டை ‘பான்’ அட்டை: ஆஸம் கான், மகனுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT