முகப்பு
தமிழ்நாடு

கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? மழைக்கு வாய்ப்பு?

கடும் வெய்யில் வாட்டுவது குறித்து வானிலை நிபுணர்கள் தெரிவித்திருப்பதாவது,

Updated On : 3 ஏப்ரல், 2026 at 7:12 AM
கடும் வெய்யில் - File photo
பகிர்:

சென்னை: காலை 7 மணிக்கெல்லாம் சூட்டெரிக்க வந்துவிடும் சூரியன், மாலை 5 மணியானாலும் ஓய்வெடுக்கச் செல்வதில்லை. இடையே 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெய்யில் கொளுத்துகிறது.

சென்னையை அடுத்த மீனம்பாக்கத்தில் வியாக்கிழமை அதிகபட்ச வெப்பநிலையாக 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்கிறது.

தரைக்காற்றின் வேகம் குறைந்திருப்பது மற்றும் கடல் நிறைந்த கிழக்கு திசையிலிருந்து தரைப்பகுதிக்கு வரும் காற்றின் வருகை தாமதமாவது போன்றவை, பகல் நேரத்தில் வெப்பத்தை அதிகரித்து வெள்ளிக்கிழமையும் சென்னையில் 36 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.