முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை. கோப்புப் படம்
தமிழ்நாடு

திமுக தலைமையிலான வலுவான கூட்டணி: செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான அரசே அமையும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

இணையதளச் செய்திப் பிரிவு

திமுகவுடன் வலுவான கூட்டணியில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் செல்வப்பெருந்தகை பேசுகையில், "இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியும் தொடர்ந்து வலுவாக உள்ளது.

திமுக மீண்டும் தொடர்ந்து வெற்றி பெறும். இந்த திமுக அரசே தொடரும் என்று மக்கள் ஏற்கெனவே சான்றிதழ் வழங்கிவிட்டனர். நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பிப். 22 ஆம் தேதியில் திட்டமிடப்பட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விடும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாள்களுக்கும் மேலாக காங்கிரஸ் காத்துக்கொண்டிருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைக்காததால், தொண்டர்களிடையே வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

இதனையடுத்து, "கட்சித் தலைவரால் தொகுதிப் பங்கீடு குழு விரைவில் அமைக்கப்பட்டு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும், பிப். 22 ஆம் தேதி முதல் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று திமுக அறிவித்தது.

DMK will win again and achieve consecutive victories, says Tamil Nadu Congress president K. Selvaperunthagai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு

மணிப்பூரில் மீண்டும் கலவரம் : 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பு!

கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!

இந்தோனேசியா பாத்தாம் தீவில் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா!

உயர்வுடன் தொடங்கி... சில நிமிடங்களில் சரிந்த பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT