சி.வி. சண்முகம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

நாளை சிம்பு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: சி.வி. சண்முகம் பேச்சு

தவெகவை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அரசியலுக்கு யார் வந்தாலும் போனாலும் திமுகதான் நமக்கு ஒரே எதிரி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளார்.

திண்டிவனத்தில் அதிமுக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,

"அரசியலுக்கு யார் வந்தாலும் போனாலும் சரி, யாரைப்பற்றியும் நமக்கு கவலையில்லை. அன்றும் இன்றும் என்றும் நமக்கு ஒரே எதிரி திமுகதான். வரும் தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டியே.

மூப்பனார் வந்தார், வைகோ வந்தார், விஜயகாந்த் வந்தார், போய்விட்டார்கள். திமுகவிடம் இன்று பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறாரே கமல்ஹாசன், அவர் வந்தார், உடனே மாற்று சக்தி வந்துவிட்டது, தமிழ்நாட்டுக்கே ஒளி கொடுத்துவிட்டார் என்று பேசினார்கள். டார்ச் லைட் கொண்டு டிவியை அடித்து உடைத்தார். அவரும் போய்விட்டார்.

இப்போது ஒருவர்(விஜய்) வந்திருக்கிறார். சினிமா தியேட்டரில் வேண்டுமானால் விசில் அடிக்கலாம். பேருந்தை நிறுத்த வேண்டுமானால் விசில் அடிக்கலாம். மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதை யாராலும் நிறுத்த முடியாது.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், நாளை சிம்பு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒன்று முளைத்துக்கொண்டுதான் இருக்கும். அதனால் அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை" என்று பேசியுள்ளார்.

Former AIADMK minister C.V. Shanmugam's criticised tvk party and vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தே பாரத் ரயில் கட்டணம்! சீனா, ஜப்பான், பிரேசிலை விடக் குறைவு: அஸ்வினி வைஷ்ணவ்

சர்ச்சைக்குள்ளான பாகிஸ்தான் வீரரின் பந்துவீச்சு ஸ்டைல்.. ஆதரவு குரல் கொடுத்த அஸ்வின்!

ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

ஸ்டாய்னிஸ் அதிரடி: அயர்லாந்துக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.!

பஞ்சாபின் மொஹாலியில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT