செல்வப்பெருந்தகை TNDIPR
தமிழ்நாடு

மீண்டும் திமுக ஆட்சிதான்! பேரவையில் செல்வப்பெருந்தகை பேச்சு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இடையே சலசலப்பு நீடித்து வருகின்றது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது செல்வப்பெருந்தகை பேசுகையில்,

”நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள். தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பெரும்புதூர் தொகுதியில் பல சாலைகள் பழுதடைந்துள்ளது. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பது தமிழ்நாட்டு மக்களால் முடிவு செய்யப்பட்டது.

இருந்தபோதிலும், தேர்தலுக்கு முன்னதாக பழுதடைந்த சாலைகள் சரிசெய்யப்படுமா? எனக் கேட்க விரும்புகிறேன்” எனப் பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, “செல்வப்பெருந்தகையின் கோரிக்கை நியாயமானவை. எந்தெந்த சாலைகள் என்று முறைப்படி கடிதம் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், அடுத்த நிதியாண்டில் செய்து கொடுக்கிறோம்” என்றார்.

DMK is in power again! Selva Perunthagai's speech in the Assembly!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்காரவேலரின் புகழை வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்: மு.க.ஸ்டாலின்

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவு!!

போனில் எந்த பிரச்னையும் இல்லை.. உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப்!

வீட்டைப் பராமரிக்க ஒரு அட்டவணை!

தங்கம் - வெள்ளி விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT