மதுரை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது தித்திக்கும் செய்தி என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ மதுரையில் இன்று கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருக்கும் நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது இனிப்பான செய்தி என்றார்.
மேலும், வரும் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்கும் என்பது என் கணிப்பு. மதிமுக இந்த முறை தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்.
தேமுதிகவும் கூட்டணியில் இணைந்திருப்பத தித்தப்பான செய்தி. இதனை நாங்கள் வரவேற்கிறோம். தேமுதிக இணைந்திருப்பது திமுக கூட்டணியை பலப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி கலகலத்துப் போனது என்றும் தெரிவித்துள்ளார்.
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். அதுவே தேர்தல் முடிவாக அமையும் என்பது எனது கருத்து. கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. திமுக தனது பெரும்பான்மையோடு அமைக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சிகள் அந்த அரசுக்கு பக்கபலமாக அரசியல் செய்யும்,இதே நிலைமை தொடரும் என்பதுதான் என்னுடைய கணிப்பு.
தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வலுவாக ஏற்கனவே இருந்த திமுக இதனால் இன்னும் பல பெரும். தேர்தல் வெற்றி என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என கூறி வந்தேன் இப்போது எங்கள் கூட்டணி மேலும் மேலும் பலம் பெற்றுள்ளது.இது எனக்கு தித்திக்கும் வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதையும் படிக்க..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.