போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக: அண்ணாமலை
போலியான வாக்குறுதிகளால் தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
போலியான வாக்குறுதிகளால் தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை.
கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார். இது முழுக்க முழுக்க, மக்களை ஏமாற்றும் நாடகம்.
போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
summary