தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அல்வா கொடுத்து விழிப்புணர்வு!
தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளைப் பற்றி..
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அல்வா மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதன முறையில் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சாவூர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே தடுத்து நிறுத்திய காவலர்கள் அவர்களுக்குத் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி அவர்களுக்கு அல்வா மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
On the occasion of Thiruvalluvar Day, traffic police officers created awareness in a unique way by distributing halwa and copies of the Thirukkural to motorists who were riding without helmets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.