பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை! - டிடிவி தினகரன்
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - டிடிவி தினகரன்
தேனி : வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) கட்சி பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார். வரும் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தே அமமுக போட்டியிட உள்ள நிலையில், தேனியில் குடியரசு நாளில் செய்தியாளர்களுடன் தினகரன் பேசியதாவது :
“முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அதிகாரத்தில் இருக்கும்போது அதை நெருக்கமாக கூடவிருந்து பார்த்துவிட்டதாகவும், ஆகவே, தன்னுடன் அமமுக நிறுவப்பட்டநாள் தொடங்கி உடனிருப்பவர்களை வெற்றி பெறச் செய்து அவர்களை அமைச்சர்களாக்கிப் பார்ப்பதே தனது விருப்பம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “திமுக அரசை நீக்கி, அஇஅதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சியை அமைப்பதே விருப்பமெனவும், அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் ஓர் அங்கமாக அமமுக இருக்கும்” என்றார்.
Advertisement
Advertisement
“ஜெயலலிதா மறைவுக்குப்பின், அம்மாவின் ஆதரவாளர்களுக்கு அவருடைய இடத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி ஒளி விளக்காக வழிகாட்டி வருவதாகவும்” புகழாரம் சூட்டினார்.
“பழனிசாமியுடன் கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டதாகவும், ஆகவே அவருடன் கைகோத்து தேர்தல் பிரசாரம் செய்வேன்” என்பதையும் உறுதிப்படுத்தினார். “பழனிசாமி தமது மூத்த சகோதரரைப் போன்றவர்” என்றும் பேட்டியில் குறிப்பிட்டார்.
“முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஒரு சிலரது அறிவுரையை ஏற்று அதன்பேரில் தர்ம யுத்தம் போராட்டத்தை நடத்தினார். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால், அவரே கடந்த காலத்தில் முதல்வராக நீடித்திருப்பார்” என்றார்.
விஜய் பற்றிய அதிமுகவின் விமர்சனத்துக்குப் பதிலளித்துப் பேசிய அவர், “விஜய் ஊழல் பற்றி வீட்டிலிருந்தபடியே பேசி வருகிறார். முதலில், அவரால் சினிமா டிக்கெட் ப்ளாக்கில் விற்பனை செய்யப்படுவதைக்கூட தடுத்து நிறுத்த முடியாது” என்று விமர்சித்தார்.
AMMK leader TTV Dhinakaran, an ally of the BJP, on Monday said he was not keen on contesting the upcoming Assembly election in Tamil Nadu, but wanted those in his party to win and become ministers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.