இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.
நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன்
நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூலை 8) தெரிவித்தார்.
திருமாவளவனின் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்திருந்தார். அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகும் தவெகவுக்கு ஆதரவு திமுகவுடன் நட்பு என திருமாவளவன் பேசியிருந்ததைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசினார்.
பிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்!
பிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம் பெறுவது மருத்துவமனைகளில் புழக்கத்தில் உள்ளதாகவும் இது தொடர்பாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் இன்று (ஜூலை 8) தெரிவித்தார்.
Advertisement
Advertisement
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு!
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 8) ஆய்வு மேற்கொண்டார்.
நீட் வினாத்தாள் கசிவு! இருவரின் காவல் நீட்டிப்பு!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பயிற்சி மைய நிறுவனர் உள்பட இருவரின் நீதிமன்றக் காவலை ஜூலை 11 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
புதிய ரேஷன் கார்டுகள்!
புதிய ரேஷன் கார்டுகள் குறித்து உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தகவல்.
தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன?
தமிழகத்தில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அந்தஸ்து பெற முந்தைய திமுக அரசு, விதிகளை மீறி ஒப்புதல் வழங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக புறநோயாளிகள் பிரிவு சேவைக்கான முன்பதிவு செய்யும் வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஜூலை 8) தொடக்கிவைத்தார்.
மத்திய அரசுக்கு மண்டியிட நினைக்கிறதா தவெக அரசு? திமுக
ஒப்பந்தம் ரத்து
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
பால், தயிர் விலை உயர்வு
தமிழ்நாட்டில் நாளை முதல் (ஜூலை 9) ஆரோக்கியா நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது.
மேயர் பிரியா புறக்கணிப்பு!
அமைச்சர் வெங்கட்ரமணன் பங்கேற்ற சென்னை மாநகராட்சியின் நிகழ்ச்சியை மேயர் ஆர். பிரியா புதன்கிழமை புறக்கணித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கம்
நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெண்டர்கள் ரத்து!
சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை!
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது.
நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!
நீட் யுஜி தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மேலும் நீட்டித்து என்டிஏ அறிவித்துள்ளது.
ஈரானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ராணுவம் மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன்
அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்தது மரபுதான் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 8, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.