தமிழக ஆளுநர் பொறுப்பேற்றார் ராஜேந்திர ஆர்லேகர்!
தமிழக ஆளுநர் பொறுப்பேற்ற ராஜேந்திர ஆர்லேகர் குறித்து...
தமிழ்நாட்டின் ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் இன்று(மார்ச் 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநர் ஆர். என். ரவி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆர். வி. ஆர்லேகர் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கவுள்ளார்.
இதற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. ஆர்லேகருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக ஆளுநராக இருந்த ஆர். என். ரவி, மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து சென்னையிலிருந்து விமானத்தில் தில்லி வழியாக கொல்கத்தாவுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை (மார்ச் 12) பதவியேற்றுக் கொண்டார்.