பரபரப்பில் அரசியல் களம்! முக்கிய கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்கள்!
தமிழகத்தில் முக்கிய கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக...
தமிழகத்தில் அரசியல் சூழலுக்கு மத்தியில் முக்கிய கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் யாரும் எதிர்பாராத முடிவுகள் வெளியாகி, பரபரப்பான நிலையில், அடுத்த ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வியும் பரபரப்பும் நிலவி வருகிறது.
தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவானபோதிலும், ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களைப் பெறவில்லை என ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்த நிலையில், மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணிகளில் தவெக மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
Advertisement
இதனிடையே, தமிழகத்திம் முக்கிய பெரும் கட்சிகள் இன்று (மே 8) ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துகின்றன.
நீலாங்கரையில் தவெக முக்கிய நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இதனிடையே, கூட்டணியில் சேருமாறு கோரிய தவெகவின் ஆதரவு கடிதம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றும், விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் நாளையும் ஆலோசனை நடத்துகின்றனர்.
மேலும், பாஜகவின் கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.