விஜய்க்கு ஆதரவளிக்க வேண்டும்: திருமாவளவனுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு திருமாவளவனுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு விசிக தலைவர் திருமாவளவனுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க, இன்னும் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவை என்பதால், திருமாவளவன் தலைமையிலான விசிகவின் ஆதரவையும் தவெக கோரியுள்ளது. இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி, இன்று அறிவிக்கவுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
இதனிடையே, விஜய் ஆட்சியமைக்க விசிக ஆதரவளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, அவர் கூறியதாவது, "தமிழக மக்கள் நலன் கருதி, தமிழக மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியலில் ஈடுபட்டுள்ள திருமாவளவன், மக்களின் உணர்வுகளை மதித்து புதிய ஆட்சியை ஏற்படுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.
தவெக ஆட்சியமைக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகத் தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாதநிலையில், 107 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது. மேலும், ஆட்சியமைப்பதற்காக மற்ற கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரி வருகிறது.
இதுவரையில், தவெக ஆட்சியமைப்பதற்கு 5 இடங்களை வென்ற காங்கிரஸும், தலா 2 இடங்களை வென்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. இருப்பினும், ஆட்சியமைக்க இன்னும் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவை என்பதால், திருமாவளவன் தலைமையிலான விசிகவின் ஆதரவையும் தவெக கோரியுள்ளது. இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி, இன்று அறிவிக்கவுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
PMK Former Ramadoss appeals to VCK Leader Thirumavalavan to extend support for TVK Vijay to form a government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.