அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும் : திருமாவளவன்
தவெக ஆட்சி கவிழ எந்தவொரு சூழலிலும் இடம் கொடுக்கமாட்டோம் என திருமாவளவன் உறுதி அளித்துள்ளது குறித்து...
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைவதால், தமிழக வெற்றிக் கழகத்தின் நம்பகத்தன்மை கெடும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (மே 26) தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:
''குன்னத்தில் நடந்த திமுக - விசிக மோதல் கவலை அளிக்கிறது. விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் களையப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
அதிமுகவுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. அதிமுக நெருக்கடிகளை சந்திக்கும் என தேர்தலுக்கு முன்பே நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதிமுகவில் இருந்து யார் வந்தாலும் கட்சியில் இணைத்துக்கொள்வது தவெகவின் நம்பகத்தன்மையை கெடுக்கும். இது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தவெக ஆதரவு அளிக்கக் கூடாது.
பாஜக உடனான கூட்டணியில் அதிமுக இல்லாமல் இருந்திருந்தால், அக்கட்சியுடன் இணைந்து தவெக ஆட்சி அமைத்திருக்கும்.
5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடிப்போம். அந்த நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். எந்த சூழலிலும் தவெக ஆட்சி கவிழ இடம் கொடுக்க மாட்டோம் என்ற நம்பிக்கையோடு தவெக நிர்வாகிகள் ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும்'' என திருமாவளவன் குறிப்பிட்டார்.
TVK's Credibility Will Be Tarnished by AIADMK MLAs Thirumavalavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.