முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் சூறைக்காற்று: விமானங்கள் தாமதம்!

சென்னையில் சூறைக்காற்று வீசியதால் விமானங்கள் தாமதமாக புறப்படுவது பற்றி...

ஏர் இந்தியா விமானம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னையில் விமான நிலையம் உள்ள மீனம்பாக்கம், மெரீனா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று காலை சூறைக்காற்று வீசியது.

இதனால் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன, தரையிறங்கின.

Advertisement

Advertisement

சென்னை மீனம்பாக்கம் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 10 விமானங்கள் தாமதம்

ஹைதராபாத்தில் இருந்து வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்குச் சென்றது. அதேபோல துபை, அபுதாபியில் இருந்து வந்த விமானங்கள் சூறைக்காற்றால் சென்னையில் தாமதமாக தரையிறங்கின.

சென்னையில் இருந்து தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, கோவை, மதுரைக்குச் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

summary

Gale-force winds in Chennai: Flights delayed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.