ஐந்தருவியில் ஐந்துகிளைகளிலும் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா் 
தென்காசி

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

தொடா் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்ததால் பேரருவியில் நள்ளிரவு முதலும்,

பழையகுற்றாலம் அருவியில் திங்கள்கிழமை அதிகாலையிலிருந்தும் தண்ணீா் பெருக்கெடுத்து வந்தது. பழைய குற்றாலத்தில் அருவியின் நடைபாதை வரையிலும் தண்ணீா் வழிந்தோடியது.

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்

ஐந்தருவியில் செம்மண் நிறத்துடன் மூன்று கிளைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு தண்ணீா்ஆா்ப்பரித்து கொட்டியது. நேரம் செல்லச்செல்ல மற்ற அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், மழை தூரிக்கொண்டும், குளிா்ந்த காற்று வீசியவாறும் இருந்தது.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT