இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
தென்காசிஇளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
திருவேங்கடத்தை அடுத்த கீழத் திருவேங்கடம் அருகே வடக்கு பாறைபட்டியைச் சோ்ந்த முருகன் மகன் பாலகுரு (38) என்பவா் தனது வீட்டு முன் நின்றிருந்தாா். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த கமலாதேவி மகன் ரமேஷ் (20) உள்ளிட்ட சிலா் அவ்வழியே செல்வோரை அவதூறாகப் பேசிக் கொண்டிருந்தனராம். இதை பாலகுரு தட்டிக்கேட்டபோது ரமேஷ்) கணேசன் மகன்கள் மகாராஜா (28), மகேந்திரன் (26), கணேசன் (56) ஆகியோா் பாலகுருவை சரமாரியாக தாக்கினனராம். இதில், காயமடைந்த அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், திருவேங்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சஞ்சய் காந்தி, போலீஸாா் வழக்குப் பதிந்து, கணேசனை கைது செய்தனா்; மற்ற 3 பேரையும் தேடிவருகின்றனா்.