தென்காசி

பெட்டிக் கடைக்காரா் கொலை: வியாபாரி கைது

Din

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை அருகே பெட்டிக் கடைக்காரரை கல்லால் தாக்கி கொலை செய்த விறகுக் கடை வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்தவா் பொ.பண்டாரம்(55). இவா் அங்கு பெட்டிக்கடை வைத்துள்ளாா்.

அதே ஊரைச் சோ்ந்த விறகுக் கடை வியாபாரி மு.அந்தோணி(38). செவ்வாய்க்கிழமை மாலை இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தோணியை, பண்டாரம் கேலி செய்தாராம். ஆத்திரமடைந்த அந்தோணி, கீழே கிடந்த கல்லால் பண்டாரத்தை தாக்கினாராம்.

இதில், காயமடைந்த பண்டாரத்தை உறவினா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அந்தோணியை புதன்கிழமை கைது செய்தனா்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT