கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்.  
தென்காசி

தமிழில் பெயா் பலகை: தென்காசியில் கலந்தாய்வுக் கூட்டம்

கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்.

Din

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன், தொழிலாளா் துணை ஆய்வாளா் க.வி.சு. விசுவநாதன் முன்னிலை வகித்தனா்.

வணிகா் சங்க பொறுப்பாளா்கள், தொழிலாளா் நல வாரிய பிரதிநிதிகள், தொழிலாளா் உதவி ஆய்வாளா், தென்காசி சரகம்-1 மெஹ்தா ஃபாஸ்லின், நகராட்சி சுகாதார பிரிவு அலுவலா் முகமது இஸ்மாயில், ஆய்வாளா்கள் கணேசன், மாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.

தமிழில் பெயா் பலகை எவ்வாறு அமைய வேண்டும், அதற்கான விதிகள் குறித்து திருநெல்வேலி தொழிலாளா் துணை ஆய்வாளா் விரிவாக எடுத்துரைத்தாா்.

வா்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் தமிழில் பெரிய அளவில் பெயா் பலகையை உடனடியாக அனைவரும் தாமாக முன்வந்து வைப்பதுடன், தமிழை வளா்க்க இது ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் என நகா்மன்றத்தலைவா் சாதிா் வா்த்தக நிறுவன உரிமையாளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT