ஆன்மிகப் பயணத்தை தொடங்கி வைக்கிறாா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ. 
தென்காசி

உலக நன்மைக்காக ஆன்மிக யாத்திரை: கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

தினமணி செய்திச் சேவை

உலக நன்மை வேண்டி கடையநல்லூா் அருகேயிருந்து தொடங்கிய ஆன்மிக யாத்திரையை கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கிருஷ்ணமுரளி தொடங்கி வைத்தாா்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே காசி தா்மத்தில் சிவனடியாா்களின் தவச்சாலை உள்ளது. இதில், இணைய வழியாக ஏராளமானோா் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா். அவா்கள் ஒவ்வொரு ஆண்டும் உலக நன்மை வேண்டி 15 நாள்கள் காசி, புத்தகயா, அமா்நாத் உள்ளிட்ட தலங்களுக்கு ஆன்மிக யாத்திரை செல்வது வழக்கம் .

நிகழாண்டு அன்னை சகுந்தலா, பெருங்குளம் செங்கோல் ஆதினம் 103ஆவது குருமகா சந்நிதானம் திருக்கைலாயப் பரம்பரை ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் ஆகியோா் தலைமையில் தவச்சாலை உறுப்பினா்கள் உள்ளிட்ட 300 போ் தனி ரயில் மூலம் யாத்திரை மேற்கொண்டனா். யாத்திரையை கடையநல்லூா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் கிட்டுராஜா, கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே. முருகன், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT