கலைத் திருவிழா போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகள். 
தென்காசி

மாவட்ட கலைத் திருவிழா போட்டியில் வன்னிக்கோனேந்தல் பள்ளி முதலிடம்

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் அருகே வன்னிக்கோனேந்தல் தொடக்கப் பள்ளி மாணவா்கள் கலைத் திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா்.

பள்ளி கல்வித் துறை சாா்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைத் திருவிழா அண்மையில் பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளுக்கான 3 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான நாட்டுப்புற நடனம் குழு போட்டியில் வன்னிக்கோனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணன், துணைத் தலைவா் வள்ளி நாயகம், ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT