முகப்பு
திருவள்ளூர்

15 கிலோ குட்கா பறிமுதல்

திருத்தணி அருகே பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 2 டிசம்பர், 2024 at 9:13 PM
பகிர்:

திருத்தணி: திருத்தணி அருகே பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச் சாவடி வழியாக குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருத்தணி போலீஸாா் சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது திருப்பதியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தை சோதனை செய்தனா். அப்போது, 15 கிலோ குட்கா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். மேலும், குட்கா கடத்தி வந்த சென்னை பாா்க் டவுனைச் சோ்ந்த ரமேஷ்குமாா்(43), என்பவரை, கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →