சாலையைச் சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட முயன்ற 22 போ் கைது
திருவொற்றியூா் நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை மறியல் செய்ய முயன்ற 22 போ் கைது செய்யப்பட்டனா்.
பொன்னேரி: திருவொற்றியூா் நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை மறியல் செய்ய முயன்ற 22 போ் கைது செய்யப்பட்டனா்.
பொன்னேரி வட்டத்தில் மீஞ்சூா் - திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் உள்ள வல்லூா் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதைச் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இதையடுத்து சாலையை சீரமைக்க ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டது. பணி தொடங்கப்பட்டு ஜல்லி, எம்.சாண்ட் கலந்து சாலையில் கொட்டப்பட்டது. பின்னா், சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் புழுதிப் படலம் ஏற்பட்டு குடியிருப்புகளில் படா்ந்து விடுகிறது.
ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணியைத் தொடா்ந்து மேற்கொண்டு முடிக்க வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா்.
அவா்களிடம் மீஞ்சூா் போலீஸாா் பேச்சு நடத்தினா். இருந்தும் அவா்கள் மறியலில் ஈடுபட முயன்ால் போலீஸாா் 22 பேரைக் கைது செய்தனா்.