நந்தி வாகனத்தில் சிவன் - பாா்வதி உலா
சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவான் வாகனத்தில் சுவாமி கோயில் வளாகத்தில் 3 முறை உலா வந்து அருள்பாலித்தாா். திருத்தணி பழைய தா்மராஜ் கோயில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மூலவருக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட அபிஷேக பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. உற்சவா், நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழு தலைவா் டி.எஸ். சீனிவாசன், கோயில் செயலாளா்கள் சி.குமரேசன், எஸ்.சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.