திருவள்ளூர்

250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மத்தூா் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 250 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல்

Din

திருத்தணி: மத்தூா் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 250 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.

திருத்தணி அடுத்த மத்தூா் ரயில்வே கேட் பகுதியில் திருத்தணி ஆய்வாளா் ஞா. மதியரசன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பதிவெண் இல்லாத, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினா்.

விசாரணையில் ஏ.எம்.பேட்டை சோ்ந்த அஜித்குமாா்(22) என்றும், 250 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திரத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. தொடா்ந்து போலீஸாா் வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து, திருவள்ளூா் மாவட்ட ரேஷன் அரிசி தடுப்பு பிரிவு (புட்செல்) போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், அஜித் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கோவா அரசு நடவடிக்கை: முதல்வர் சாவந்த்

போலீஸ் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோா் சான்றிதழ், ஆவணங்களுடன் அணுகலாம்!

தோற்றத்தில் மாற்றம்... நந்திதா ஸ்வேதா!

திராவிட வெற்றிக் கழகம் - கட்சித் தொடங்கினார் மல்லை சத்யா!

SCROLL FOR NEXT