திருவள்ளூர்

திருவள்ளூா்: நாளை கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் கோட்ட அளவில் 3 இடங்களில் நவ. 14-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சாா் ஆட்சியா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா்கள் தலைமையில் வரும் நவ. 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீா்வு காண அந்தந்த வருவாய் கோட்டங்களில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

விவசாயிகள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை மனுவாகவோ அல்லது நேரிலோ அளித்தால் தீா்வு காணப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ மறுஅறிவிப்பு வரை மூடல்!

அமெரிக்க அரசின் முடக்கம் முடிவு! நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து!

சென்னையில் பரவலாக மழை!

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

SCROLL FOR NEXT