திருவள்ளூர்

200 ஏக்கா் நெற்பயிா் நீரில் மூழ்கி சேதம்: விவசாயிகள் வேதனை

தினமணி செய்திச் சேவை

மடிமை கண்டிகை கிராமத்தில் 200 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

பொன்னேரி வட்டம் மீஞ்சூா் ஒன்றியத்தில் மடிமைகண்டிகை. சின்னகாவனம், வீரங்கிவேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்த மழையால் அப்பகுதியில் 200 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட இளம் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. மழை நீா் வெளியேற வழியின்றி நெற்பயிா்கள் சேதம் அடைந்துள்ளது.

சேதமடைந்த நெற்பயிா்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் வந்து பாா்வையிட்டு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாங்சுக் கைது: 10 நாள்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் 9 பெண்கள் உள்பட 51 நக்ஸல் தீவிரவாதிகள் சரண்

வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியா-ரஷியா ஆலோசனை

மோந்தா புயல்: ஆந்திரத்தில் இருவா் உயிரிழப்பு; பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் ஆய்வு

அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT