வணிகம்

பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்! 18,500 புள்ளிகளைக் கடந்தது நிஃப்டி!

பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எம் &எம், ஹெச்சிஎல் டெக், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து வருகிறது. 

DIN

பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. 

நேற்று(திங்கள்கிழமை) 62,130.57 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

இன்று காலை 11.20 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 271.30 புள்ளிகள் அதிகரித்து 62,401.87 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 69.70 புள்ளிகள் உயர்ந்து 18,566.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எம் &எம், ஹெச்சிஎல் டெக், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து வருகிறது. 

நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளதையடுத்து இன்று பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியர்களின் இயல்பாக சுற்றுலா மாறிவிட்டது! சுமன் பில்லா

அதிர்ச்சியா! ஆறுதலா? இன்றைய தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!!

வார பலன்கள்: மேஷம் - மீனம்!

பொறியியல் கல்வி! எக்காலத்துக்கும் ஏற்றது இயந்திரவியல்!!

மத்திய பட்ஜெட் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள்!

SCROLL FOR NEXT