என்.சந்திரசேகரன்(58) 
வணிகம்

டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் தேர்வு

இந்தியாவின் மிகப்பெரிய குழுமமான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன்(58) மீண்டும்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

இந்தியாவின் மிகப்பெரிய குழுமமான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன்(58) மீண்டும்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாடா சன்ஸ் குழுமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு இணைந்து 2017-இல் தலைவராக நியமிக்கப்பட்டவர் என்.சந்திரசேகரன்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய பங்களிப்பு திருப்தி அளித்ததால் இன்று நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் டாடா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ரத்தன் டாடா ஒப்புதலில் என்.சந்திரசேகரனை மீண்டும்  டாடா சன்ஸ் தலைவராக தேர்வுசெய்துள்ளனர்.

டாடா ஸ்டீல், டாடா பவர், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களைக் கண்காணிக்கும் என்.சந்திரசேகரனின் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் பங்குதாரர்கள் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையால் அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT