முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் ஏற்றம்! சென்செக்ஸ், நிஃப்டி இன்றும் உயர்வு!

வணிகத்தின் மூன்றாவது வணிக நாளான இன்று (ஆக. 21) பங்குச் சந்தை உயர்வுடன் முடிந்தது.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 12:25 PM
கோப்புப் படம்
பகிர்:

வணிகத்தின் மூன்றாவது வணிக நாளான இன்று (ஆக. 21) பங்குச் சந்தை உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் இருந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 102.44 புள்ளிகள் உயர்ந்து 80,905.30 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.13 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 71.35 புள்ளிகள் உயர்ந்து 24,770.20 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.29 சதவீதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 11 நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.

அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி பங்குகள் 2.47% உயர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஏசியன் பெயின்ட்ஸ் 1.56%, ஹிந்துஸ்தான் யூனிலிவர் 1.46%, ஐடிசி 1.33%, நெஸ்ட்லே இந்தியா 1.33%, பஜாஜ் ஃபின்சர்வ் 1.18%, பார்தி ஏர்டெல் 0.99%, ஜேஎஸ்டபிள்யூ 0.95%, அதானி போர்ட்ஸ் 0.74%, என்டிபிசி 0.67% பங்குகள் உயர்ந்திருந்தன.

இதேபோன்று டெக் மஹிந்திரா அதிக சரிவைக் கண்டது. அதனைத் தொடர்ந்து அல்ட்ராடெக் சிமென்ட், டாடா ஸ்டீல், பவர் கிர்ட், எச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, எச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

இதேபோன்று நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் திவிஸ் லேப் நிறுவன பங்குகள் 3.77% உயர்ந்திருந்தன. அதற்கு அடுத்தபடியாக டைட்டன் கம்பெனி 2.47%, எஸ்பிஐ லைஃப் 2.24%, சிப்லா 2.04%, எச்டிஎஃப்சி லைஃப் 1.97%, ஹிண்டல்கோ 1.89%, ஏசியன் பெயின்ட்ஸ் 1.56%, அதானி எண்டர்பிரைசஸ் 1.47% உயர்ந்திருந்தன

முழு கட்டுரையைப் படிக்க →