FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3வது நாளாக 12 காசுகள் சரிந்து ரூ. 85.27 காசுகளாக நிர்ணயம்.

Updated On : 26 டிசம்பர் 2024, 6:53 pm IST
ரூபாய் மதிப்பு - PTI
பகிர்:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3வது நாளாகத் தொடர்ந்து சரிந்து, கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு மூன்றாவது நாளாக 12 காசுகள் சரிந்து ரூ. 85.27 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கிய நிலையில், வங்கிகளுக்கு இடையிலான நாணய பரிமாற்றத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் ரூ. 85.23 காசுகளாக வணிகமானது.

Advertisement

Advertisement

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ரூபாய் மதிப்பு தொடந்து எதிர்மறையாகவே இருந்தது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு கடுமையாகச் சரிந்து ரூ. 85.28 காசுகளாக இருந்தது.

வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு ரூ. 85.27 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 காசுகள் சரிந்துள்ளது.

ரூபாய் மதிப்பு - PTI

செவ்வாய்க்கிழமை 4 காசுகள் குறைந்து ரூ. 85.15 ஆக இருந்தது. திங்கள் கிழமை 9 காசுகள் சரிந்தது.

பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 0.39 புள்ளிகள் சரிந்து 78,472.48 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.00050 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22.55 புள்ளிகள் உயர்ந்து 23,750.20 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.095 சதவீதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 13 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 17 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

இதையும் படிக்க | மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, மீடியா பங்குகள் உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments