FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ,55 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை திடீரென பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.55,360-க்கு விற்பனையானது.

Updated On : 18 ஜூலை 2024, 1:55 am IST
தங்கம்
பகிர்:

இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.54,640-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை தங்கம் விலை திடீரென உயா்ந்து பவுன் ரூ.55 ஆயிரத்தைக் கடந்தது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயா்ந்து ரூ.6,920-க்கும், பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.55,360-க்கும் விற்பனையானது.

இதற்கிடையே, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.100.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 உயா்ந்து ரூ. 1,00,500-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments