தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ,55 ஆயிரத்தைக் கடந்தது
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை திடீரென பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.55,360-க்கு விற்பனையானது.
இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.54,640-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை தங்கம் விலை திடீரென உயா்ந்து பவுன் ரூ.55 ஆயிரத்தைக் கடந்தது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயா்ந்து ரூ.6,920-க்கும், பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.55,360-க்கும் விற்பனையானது.
இதற்கிடையே, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.100.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 உயா்ந்து ரூ. 1,00,500-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.