வணிக நடவடிக்கைகளை 2025 ஏப்ரல் வரை ஒத்திவைத்த நொய்டா விமான நிலையம்!
நொய்டா விமான நிலையம், தனது வணிக விமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 2024க்கு பதிலாக ஏப்ரல் 2025 இறுதிக்கு ஒத்திவைத்ததுள்ளது.
புதுதில்லி: நொய்டா விமான நிலையம், தனது வணிக விமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 2024க்கு பதிலாக ஏப்ரல் 2025 இறுதிக்கு ஒத்திவைத்ததுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் மேம்பட்ட நிலையில் இருப்பதாக விமான நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானம் ஒரு பெரிய திட்டமாகும். அதன் ஓடுபாதை, பயணிகள் முனையம், கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளிட்ட கட்டுமான நடவடிக்கை அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தை கையாளுதல், வணிகப் பகுதிகளின் செயல்பாடு மற்றும் முக்கியமான பராமரிப்பு ஒப்பந்தங்களுக்கான சலுகைகள் சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான இணைப்புக்காக பல விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
தில்லியில் அமையவிருக்கும் இரண்டாவது விமான நிலையத்தை நிறுவ டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அதன் தற்போதைய கட்டுமான நிலையைக் கருத்தில் கொண்டு, 2025 ஏப்ரல் இறுதிக்குள் வணிக நடவடிக்கைகளைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜேவாரில் அமைந்துள்ள நொய்டா விமான நிலையம் ஒரு ஓடுபாதை, முனையத்துடன் திறக்கப்பட்டு, சுமார் 12 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த விமான நிலையமானது நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கையை அடைந்த இந்தியாவின் முதல் விமான நிலையமாக இருக்கும்.
கிரீன்ஃபீல்ட் நொய்டா விமான நிலையத்தின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டிற்காக நிறுவப்பட்ட யமுனா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட் என்பது சூரிச் ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஏஜி-யின் 100 சதவிகித துணை நிறுவனமாகும். அதே வேளையில், நொய்டா விமான நிலையத்திற்கான சலுகை காலம் அக்டோபர் 2021 அன்று தொடங்கி 40 ஆண்டுகள் வரை பயணிக்கும்.