யுபிஐ செயலியாக தொடரும் பேடிஎம்: புதிய முகவரிகள்!
வங்கி இணைப்பின் மூலம் செயல்பாட்டைத் தொடரும் பேடிஎம்
பேடிஎம் வங்கி சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராகச் செயல்பட நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) அனுமதி அளித்துள்ளது.
நான்கு வங்கிகளுடன் இணைந்து 5 கையாளும் முகவரிகளில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் யுபிஐ செயலியாக பேடிஎம் செயல்படவுள்ளது.
முந்தைய பின்னொட்டு முகவரியான @பேடிஎம் மூலம் செயல்படுத்தப்படும் பரிவர்த்தனைகள் யெஸ் வங்கிக்கு திருப்பி விடப்படும். பயனர்கள் இதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. புதிய முகவரியாக @பிடியெஸ் என்கிற பின்னொட்டு செயல்படும்.
Advertisement
Advertisement
நான்கு வங்கிகள் முறையே ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஆக்சிஸ், யெஸ் பேங்க் பேடிஎம் செயலிக்கான பண பரிவரித்தனைகள் கட்டமைப்பு வழங்குநர்களாக செயல்படவுள்ளன.
ஹேண்டில்கள் @பிடிஹெச்டிஎஃப்சி, @பிடிஎஸ்பிஐ ஆகியவற்றுக்கு தேசிய பரிவர்த்தனைகள் கழகம் அனுமதியளித்த போதும் அவை உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.