பிஎஸ்என்எல் 
வணிகம்

ஐபிஎல் ரசிகர்களுக்காக... ஒரு ரூபாய்க்கு 1 ஜிபி! பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு!!

ஐபிஎல் ரசிகர்களைக் கவரும் வகையில், ஒரு ரூபாயில் இணைய சேவை...

DIN

ஐபிஎல் ரசிகர்களைக் கவரும் வகையில், ஒரு ரூபாயில் இணைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் வழங்கிவரும் ரீசார்ஜ் திட்டங்களைவிட பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையிலேயே திட்டங்களை அறிவித்து வருகின்றன.

கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறியுள்ளனர்.

நாடு முழுவதும் 4-ஜி இணைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புதிதாக 75,000 கோபுரங்களை பிஎஸ்என்எல் அமைத்து வருகிறது.

4-ஜி சேவைக்குப் பிறகு பல்வேறு விலைகளில், வாடிக்கையாளர்களின் வசதிகளுக்கு ஏற்ப பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது.

அந்தவகையில் ஐபிஎல் ரசிகர்களைக் கவரும் வகையில், புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதாவது, ரூ. 251-க்கு 251 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 60 நாள்கள்.

ஐபிஎல் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், கோடிக்கணக்கான ரசிகர்கள் செல்போன்கள் மூலமே கிரிக்கெட்டை கண்டுவரும் நிலையில், அவர்களை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தத் திட்டம் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

இதையும் படிக்க | செல்போனை ரீசார்ஜ் செய்தால் இலவசமாக ஐபிஎல் பார்க்கலாம்! எப்படி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

SCROLL FOR NEXT